பண்டைய காலத்து இந்தியர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருந்தனர் என்பதில்  மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கட்டடக் கலை, சிற்பக் கலை, வானவியல், ஜோதிடம், மருத்துவம் என்று எல்லாத் துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தனர் அன்றைய இந்தியர்கள் என்றால் அது மிகையாகாது. இல்லற சுகம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. அந்த விஷயத்திலும் நம் முன்னோர்கள் பலே கில்லாடிகளாகத் தான் இருந்திருக்கிறார்கள். இல்லற உறவு பற்றிய உயர்ந்த அறிவைப் புகட்டும் நூல் தான்  வாத்ஸ்யானரின் 'காமசூத்திரம்'.  வாத்ஸ்யானர் ஒரு முனிவர் என்றும் அவர் இல்லற சுகத்தை வாழ்வில் அனுபவித்ததே இல்லை என்றும் அவரது இந்த காம அறிவு என்பது ஞானதிருஷ்டியால் பெற்றது என்றும் சொல்லுகின்றார்கள்.  அது நமக்குத் தேவையில்லை. வாத்ஸ்யானரின்  'காமசூத்திரம்' ஆபாச நூலா? மேலே படியுங்கள்.......


'காமசூத்திரம்' என்பது ஒருமுழுமையான ' பாலியல் கல்வி' நூல் என்று சொல்லலாம். ஆண்  பெண் உறவு பற்றிய விளக்கங்களும், இரு பாலரும்  தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்களும் நிறையவே அந்நூலில் உள்ளன என்பது நிஜம். ஒரு சில விஷயங்கள் இன்றைய நடை முறை எதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துப் போகாமல் இருக்கலாம். அதை தவிர்த்துப் பார்த்தால் 'காம சூத்திரம்' மிகவும் பயனுள்ள ஒரு நூல் என்றே சொல்ல தோன்றுகிறது. 

ஆபாசம் என்பது வேறு. வெறும் உணர்ச்சிகளைத்  தூண்டும் விதத்தில் எழுதுவது தான் ஆபாசம். மாறாக ஒருவருக்கு பாலியல் கல்வி போதிக்கும் நோக்கத்துடன் எழுதினால் அது ஆபாசமாகாது. 

இவ்வுலகில் உள்ள சிற்றின்பங்களில் முதன்மையானது இல்லற சுகம் தான். அதை முழுமையாக அனுபவிப்பது என்பது  தவறல்ல. உடல் சாந்தம் அடைந்த பின் மனம் சாந்தம் அடைகிறது. மனம் சாந்தமடைந்த பின் இறைவனைத் தேடி அவனை உணரும் போது தான் 'பேரின்பம்' கிட்டும். அப்படிப் பார்க்கும் போது காமம் ஆன்மிகத்தின் முதல் படி என்று கூட சொல்லலாம். அதனால் தான் முனிவர் ஒருவர் அதைப் பற்றி எழுதி இருக்கிறார் என்றே நான் நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்!

காமத்தை கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா?

கணவன் மனைவி சண்டை திருமண உறவைப் பலப் படுத்துமா?

Post a Comment

 
Top