கடவுள் முக்கியமான விஷயங்களில் ஏழை பணக்காரன் என்று பாகுபாடு வைக்க வில்லை என்றே தோன்றுகிறது. எளிதில் யார் வேண்டுமென்றாலும் கடைப் பிடிக்கக் கூடிய சில சின்ன விஷயங்கள் உங்கள் வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரலாம். உதாரணமாக இந்த 10 சின்ன விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். மேலே படியுங்கள் ..........
1. எப்பொழுதும் உற்சாகத்துடன் இருங்கள். இதற்கு பத்து பைசா கூட உங்களுக்கு செலவு கிடையாது.
2. யாருடன் பேசினாலும் முகத்தில் ஒரு சிரிப்பு அல்லது புன் முறுவல் தவழுமாறுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
3. யாராவது ஏதாவது ஒரு காரியத்தை சிறப்பாக செய்தால், தாராளமாக பாராட்டுங்கள். இதற்கு ஏதாவது செலவு ஆகுமா என்ன? ஆனால் இதனால் நமக்கு ஏற்படப் போகும் நன்மைகளோ ஏராளம், ஏராளம் என்பது நிஜம்.
4. தவறு செய்யாத மனிதனே இப்பூவுலகில் இல்லை. நீங்கள் தவறு செய்தால், உடனே தயங்காமல் மன்னிப்புக் கேளுங்கள். ஈகோ எல்லாம் வேண்டவே வேண்டாம்.
5. யாரையும் விமர்சனம் செய்யாதீர்கள். யாரையும் கேலி செய்யாதீர்கள். யார் மனமும் புண்படும்படி பேசாதீர்கள்.
6. எல்லோரிடமும் அன்பாய் இருங்கள்.
7. உங்களால் முடிந்த வரை பிறருக்கு உதவுங்கள். அதற்காக உங்கள் சக்திக்கு மீறி உதவி செய்வதும் தவறு தான்.
8. நல்ல நடத்தை, பழக்க வழக்கங்கள் மேற்கொள்ளுங்கள்.
9. நல்ல அன்பான கனிவான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். கனியிருக்க காய் கவர்ந்தற்று என்றார் நம் பாட்டன் வள்ளுவப் பெருமான். அன்பே சிவம் என்பதை மறவாதீர்கள்.
10. பிறர் செய்யும் தவறுகளை மறந்து விடுங்கள். மன்னித்து விடுங்கள். மறப்போம், மன்னிப்போம்.
மேற்கூறிய எதையுமே யார் வேண்டுமென்றாலும் பைசா செலவு இல்லாமல் பின் பற்றலாம். அபரிதமான நற் பலன்களை அடையலாம்.
வாழ்க வளமுடன்!
அனாவசிய செலவுகளை தவிர்ப்பது எப்படி?
உங்கள் இலட்சியங்களை ஏன் அடைய முடியவில்லை?
1. எப்பொழுதும் உற்சாகத்துடன் இருங்கள். இதற்கு பத்து பைசா கூட உங்களுக்கு செலவு கிடையாது.
2. யாருடன் பேசினாலும் முகத்தில் ஒரு சிரிப்பு அல்லது புன் முறுவல் தவழுமாறுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
3. யாராவது ஏதாவது ஒரு காரியத்தை சிறப்பாக செய்தால், தாராளமாக பாராட்டுங்கள். இதற்கு ஏதாவது செலவு ஆகுமா என்ன? ஆனால் இதனால் நமக்கு ஏற்படப் போகும் நன்மைகளோ ஏராளம், ஏராளம் என்பது நிஜம்.
4. தவறு செய்யாத மனிதனே இப்பூவுலகில் இல்லை. நீங்கள் தவறு செய்தால், உடனே தயங்காமல் மன்னிப்புக் கேளுங்கள். ஈகோ எல்லாம் வேண்டவே வேண்டாம்.
5. யாரையும் விமர்சனம் செய்யாதீர்கள். யாரையும் கேலி செய்யாதீர்கள். யார் மனமும் புண்படும்படி பேசாதீர்கள்.
6. எல்லோரிடமும் அன்பாய் இருங்கள்.
7. உங்களால் முடிந்த வரை பிறருக்கு உதவுங்கள். அதற்காக உங்கள் சக்திக்கு மீறி உதவி செய்வதும் தவறு தான்.
8. நல்ல நடத்தை, பழக்க வழக்கங்கள் மேற்கொள்ளுங்கள்.
9. நல்ல அன்பான கனிவான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். கனியிருக்க காய் கவர்ந்தற்று என்றார் நம் பாட்டன் வள்ளுவப் பெருமான். அன்பே சிவம் என்பதை மறவாதீர்கள்.
10. பிறர் செய்யும் தவறுகளை மறந்து விடுங்கள். மன்னித்து விடுங்கள். மறப்போம், மன்னிப்போம்.
மேற்கூறிய எதையுமே யார் வேண்டுமென்றாலும் பைசா செலவு இல்லாமல் பின் பற்றலாம். அபரிதமான நற் பலன்களை அடையலாம்.
வாழ்க வளமுடன்!
அனாவசிய செலவுகளை தவிர்ப்பது எப்படி?
உங்கள் இலட்சியங்களை ஏன் அடைய முடியவில்லை?
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.