நாளை புத்தாண்டு மலரவிருக்கிறது. எத்தனையோ பேர் சென்ற ஆண்டில் பல துன்பங்களையும் இன்னல்களையும்  அனுபவித்திற்பார்கள். இந்த ஆண்டு அவர்கள் எல்லோருக்கும் இனிய ஆண்டாக இருந்திட மனதார  வாழ்த்துகிறேன். எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. துன்பங்களும் முடியக்கூடியவை தான்.



2014 சிலருக்கு நல்ல ஆண்டாக இருந்திருக்கும். பலர் ஏதோ ஒரு மாதிரி சமாளித்து அந்த ஆண்டை ஓட்டியிருப்பார்கள். சிலருக்கு பெரிய கஷ்டங்களையும், நஷ்டங்களையும் கொடுத்திருக்கும். நம்பிக்கை தானே வாழ்க்கை. 90 வயது முதியவர்  கூட எதோ ஒரு நம்பிக்கையில் தானே வாழ்கிறார். 

போன வருடத்தை  விட இந்த வருடத்தில் நாம் மேலும் முன்னேற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தளராத தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, இறைவனின் கருணை எல்லாம் சேர்ந்து இந்த ஆண்டு உங்கள் எல்லோருக்கும் மிகப் பெரிய உயர்வைத் தரட்டும்.

உங்களை நம்புங்கள். உங்கள் உழைப்பை நம்புங்கள். இறைவனின் கருணையை நம்புங்கள். 2015 நிச்சயம் சிறப்பு மிக்க ஆண்டாக உங்கள் எல்லோருக்கும் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

2015, புத்தாண்டே வருக! பெரு வாழ்வு தருக!!

வாழ்க வளமுடன்!

அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டுமா?

உங்களை நீங்களே கொண்டாடிக் கொள்ளுங்கள் 





Post a Comment

 
Top