பொய் சொல்லுவது என்பது நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகி விட்டது. பொதுவாக ஆண்கள் பெண்களை விட அதிகம் பொய் சொல்லுவார்கள் என்கின்ற கருத்து நிலவுகிறது. பெண் ஆணுக்கு நிகரானவள் என்கின்ற நிலை உருவாகி இருக்கும் இந்த காலத்தில், பெண்கள் பொய் சொல்லுவதிலும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள பெண்கள் எல்லோருக்கும் ஒரே விதமான உணர்வுகள் தான் இருக்கின்றன. என்றாலும் காஞ்சிபுரத்திலுள்ள ஒரு பெண் கூறும் பொய்களும் கலிபோர்னியாவில் வசிக்கும் ஒரு பெண்ணின் பொய்களும் வித்தியாசப்படும் என்றே  நினைக்கின்றேன்.


பெண்கள் பொதுவாக பிரச்சினைகளைத்   தவிர்ப்பதற்காகவே பொய் சொல்லுகின்றனர்.

பெண்கள் பரவலாக எதற்காக பொய் சொல்லுகிறார்கள்? 30 வயதை கடந்து விட்ட பெண்மணி தனக்கு ஆடி வந்தால் தான் 25 வயசு ஆகும் என்று கூசாமல் பொய் புழுகுவார்கள். ஆடாமல் வந்தால் 20 தான் ஆகுமோ என்னவோ?

தனது பிறந்த வீட்டைப் பற்றி பெருமையாகவே  பேசுவார்கள் எப்பொழுதும். தான் வசதியான குடும்பத்தில் பிறந்தவள் என்று மற்றவர்களிடம் சொல்லிக் கொள்வார்கள் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும்.

தனது முன்னால் காதல் வாழ்க்கையை முற்றிலும் பெண் மறைத்து விடுவாள் தன கணவனிடமிருந்து.

மற்றவர்களிடம் பேசும் போது தான் வசதியாக இருப்பதாகவே காட்டிக்கொள்ள பெண் ஆசைப் படுகிறாள். கணவனுக்குப் பிடிக்காத பல விஷயங்களை  பெண் சர்வ சாதாரணமாக செய்து விட்டு அவைகளை மறைத்து விடுவாள்.

பெண்கள் தன கணவன் குடும்பத்தை நேசிப்பதாக சொல்லுவார்கள். தனது குழந்தைகள் கணவனிடம் அடி, திட்டு  வாங்காமல் இருக்க பொய் சொல்லுவார்கள்.

கணவனுக்குத் தெரியாமல் காசு சேமித்து வைப்பார்கள். 5000 ரூபாய்க்குப் புடவை எடுத்து விட்டு அது வெறும் 2000 ரூபாய் தான் என்று சூடம் அடித்து சத்தியம் செய்வர்.

படுக்கையில் தன கணவனுக்கு நம்பிக்கையூட்டும் வண்ணம் பொய் சொல்லுவதை தப்பு என்று எப்படிக் கூற முடியும்? தன அழகைக் கூட்ட மேக்-அப் செய்வதை பொய் என்று கூறுவது சரியாக இருக்குமா?

ஃ பிரிட்ஜில் இருக்கும் தயிரை  எடுக்க சோம்பல் பட்டுக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கணவனிடம் 'தயிர் தீர்ந்து விட்டது' என்று சொல்லும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தனக்கு தன்  கணவன் தவிர வேறு எந்த ஆண் மீதும் எந்தவிதமான ஈர்ப்பும் இல்லை என்பார்கள்.

பொதுவாக பெண்கள் சொல்லும் பொய்கள் எல்லாம்  சங்கடங்களையும், சண்டைகளையும் தவிர்ப்பதற்காகவே சொல்லப்படுகின்றன என்று நினைக்கிறேன்.

ஆண்கள் கூறும் அதிகப்படியான பொய்கள் பற்றி வேறு ஒரு வலைப்பதிவில் உங்களுடன் கூடிய விரைவில் பகிர்ந்து கொள்வேன்.

வாழ்க வளமுடன்!




          கற்பழிப்பு இந்தியாவில் அதிகரித்திருக்கிறதா?

                           விதி வலியது தானா?


Post a Comment

 
Top