ஜோதிடம் ஒரு அற்புத விஞ்ஞானம் என்று ஜோதிடர்கள் சொல்வார்கள். 

ஜோதிடம் விஞ்ஞானம் இல்லைஎன்றாலும்அது ஒரு  அற்புத கலை என்று ஒரு சாரார் சொல்லுகிறார்கள். இல்லை, இல்லை, இது வெறும் ஏமாற்று வேலை தான் என்று வேறொரு  சாரார்  கூறுகின்றார்கள்.

  ஜோதிடம் உண்மையா?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் பாரத தேசத்து முனிவர்கள் வான சாஸ்திரத்திலும்,  ஜோதிடத்திலும்  அதீத புலமை வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். எந்த ஒரு கருவியும், உபகரணமும் இல்லாமலேயே தங்கள் ஞான திருஷ்டியால் பல அற்புதங்களை செய்துகாட்டி சென்றிருக்கிறார்கள்.அவர்கள்  ஜோதிட 
சாஸ்திரத்தில் சிறந்து விளங்கினார்கள். ஜோதிடம் அவர்கள் காலத்தில் விஞ்ஞானமாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

இப்பொழுது  உள்ள ஜோதிடர்கள் முழுமையான ஜோதிட அறிவு பெற்று இருக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஜோதிடர்கள் பொய்க்கலாம். ஆனால் ஜோதிடம் என்றுமே பொய்ப்பதில்லை.




இன்றைய ஜோதிடத்தை நாம் முழுமையாக நம்ப முடியாது. ஆனாலும், நாம் இன்றைய ஜோதிடத்தை ஓரளவுக்கு பயன்படுத்தலாம்.  ஜோதிடர்கள் நமக்கு நல்லவை  நடக்கும் காலங்களையும் கெட்டவை நடக்கும் காலங்களையும் கணக்கிட்டு சொல்வார்கள். நல்ல காலங்களில் நாம் தைரியமாக சில முடிவுகளை எடுக்கலாம். நமக்கு சாதகம் இல்லாதகாலங்களில் நாம் நாம்சற்று  ஜாக்கிரதையாய் இருக்கலாம்.

ஜோதிடத்தை பற்றி ஒன்றுமே அறியாமலே சிலர் அதை பொய் என்று கூறுவார்கள். 

ஜோதிடத்தை அளவாக பயன் படுத்தி பயன் பெறுங்கள். அளவுக்கதிகமாக ஜோதிடத்தை பயன் படுத்தி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்.

ஜோதிடம் ஒரு அற்புத கலை. ஆனால் அதை ஒரு  விஞ்ஞானம் என்று சொல்லுவதற்கு இல்லை என்று சொல்லி முடிக்கிறேன். வாழ்க வளமுடன்!


Post a Comment

 
Top