சில நாட்களாகவே கற்பழிப்பு பற்றிய செய்திகள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளன. திடீரென்று இந்திய ஆண்கள் கேட்டு போய் விட்டார்களா? அல்லது இப்பொழுது மீடியாக்கள் அதிக அளவில் செயல் படுவதால் இத்தகைய  செய்திகள் வெளியே வருகின்றனவா?



பெண்கள் ஒரு வேளை எப்போதும் இல்லாத அளவில் தைரியம் அடைந்து இருப்பதால்  கற்பழிப்பு செய்திகள் அதிகம் வருகின்றனவா?

எது எப்படி இருந்தாலும் கற்பழிப்பு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்க பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

கட்டிய பெண்டாட்டி ஆனாலும் விருப்பம் இல்லை என்றால் தொடுவது தவறு. அதை கற்பழிப்பாகவே கருத வேண்டும்.  அப்படி பார்த்தால் கற்பழிக்க படாத பெண்கள் சதவிகிதம் எவ்வளவு தேறும் என்று எண்ணி பார்க்கும் வேலையை உங்களிடமே விட்டு விடுகிறேன். 

Post a Comment

 
Top