பிரபஞ்ச சக்தியை ஈர்த்து நினைத்ததை அடைய முடியுமா?


"பிரபஞ்சம்" என்றால் என்ன? நம் பூமிப்  பந்து சூரியனிலிருந்து வந்த ஒரு சிறு துளி என்கிறார்கள். சூரியனோ ஒரு நட்சத்திரத்திலிருந்து வந்த துளி என்கிறார்கள். அப்படி என்றால் ஒரு நட்சத்திரம் எவ்வளவு பெரிதாய் இருக்க வேண்டும்? அத்தகைய நட்சத்திரங்கள் எத்தனை எத்தனை கோடி இருக்கின்றன என்பதை, சந்திரனுக்கும் செவ்வாய்க்கும்  ராக்கெட் விடும்  உலக  விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவ்வளவு விண்மீன்களின் எடையையும் தாங்கி நிற்பது வெட்ட வெளியான ஆகாயம் தான். இவை எல்லாம் சேர்ந்தது தான் பிரபஞ்சம். 

இவ்வுலகில் இது வரை நடந்த எல்லா நிகழ்வுகளின் ( நல்லது,கெட்டது) பதிவுகளும் ஆகாயத்தில் சேமிக்கப்பட்டு இருக்கின்றன.  

 


நாம் வற்றை அடிக்கடி நினைக்கிறோமோ, அவற்றை பிரபஞ்சம் நமக்குத் தருகின்றது. அதனால் தான், நாம் எப்பொழுதும் நல்ல விஷயங்களையே பேச வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள். வீட்டில் கூட, "உப்பு இல்லை, புளி  இல்லை" என்று சொல்வதற்குப் பதிலாக "உப்பு வாங்க வேண்டும், புளி வாங்க வேண்டும்" என்று சொல்ல வேண்டும் என்கிறார்கள்.

பிரபஞ்சம் நாம் எதைக் கேட்கிறோமோ அதைத்  தரத் தயாராக இருக்கிறது. நமக்குத் தான் எப்படிக் கேட்டுப் பெற வேண்டும் என்பது தெரியவில்லை.

நாம் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு, சரியான படி கேட்டால் நிச்சயம் கிடைக்கும். 

பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்வது எப்படி?

நம் மனது காலியாக இருக்க வேண்டும். அதாவது எதிர்மறை எண்ணங்களோ, வெறுப்பு, குரோதம் பகை போன்ற   உணர்வுகள் இல்லாமலிருக்க வேண்டும். அன்பும் கருணையும் அதிகம் நமக்கு இருக்க வேண்டும். அப்பொழுது தான் பிரபஞ்ச சக்தியை எளிதில் ஈர்க்க முடியும். மேலும் regular தியானம் மூலம் நாம் பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும். 

நம் எல்லோருக்கும் "aura" என்கின்ற சூட்சும உடல் இருக்கிறது (subtle body). அந்த ஒளி வட்டம் (aura) தியானம், அன்பு, கருணை போன்றவைகளினால் அதிகரிக்கும். அப்பொழுது பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், பாதுகாப்பு வளையமாக aura செயல்படும்.

பிரபஞ்சத்தை நேசிக்க வேண்டும். அதை சொல்ல வேண்டும். நன்றி சொல்ல வேண்டும். எது  வேண்டுமோ அதைக் கேட்கலாம். ஆரம்பத்தில் சின்ன சின்ன விஷயங்களை  மட்டுமே கேட்க வேண்டும்-ஏனென்றால் நமக்கு முதலில் பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் சக்தி குறைவாக இருக்கும்.

நாட்கள் செல்ல செல்ல, நாம் பெரிய விஷயங்களைக் கூட பிரபஞ்சத்தைக் கேட்டு பெற்றுக் கொள்ள முடியும். 

நான், கொஞ்ச காலமாக இந்த பயிற்சியை  செய்துக் கொண்டு வருகிறேன். என்னால் பிரபஞ்ச சக்தியை ஈர்க்க முடியும் என்பதை உணர முடிகிறது. 

நாம் எதை வேண்டுகிறோமோ, அதை நம்பிக்கையுடன், ஆத்மார்த்தமாக, உணர்வுப்பூர்வமாக கேட்க வேண்டும். அப்படி கேட்டால், நிச்சயம் கிடைக்கும். 

வாழ்க வளமுடன்! 

பிரபஞ்ச சக்தியை ஈர்த்து, நினைத்ததை அடைய முடியுமா? law of attraction, cosmic energy,  how to manifest using cosmic energy, how to manifest through law of attraction 
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top