கிரிக்கெட் உலக கோப்பை  2015 போட்டியில் விளையாடுவதற்கு 15 பேர் கொண்ட பட்டியலை இந்தியா வெளியிட்டிருக்கிறது. சரியான வீர்ர்களைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா? அல்லது அரசியல் பண்ணி  திறமையான வீரர்களை புறந்தள்ளி விட்டு சுமாராக விளையாடுபவர்களை தேர்ந்தெடுத்து விட்டார்களா? மேலே படியுங்கள்......



இந்தியாவில் கிரிகெட்டிலும் அரசியல் புகுந்து விளையாட்டை கெடுத்து வருவது நாம் அறிந்ததே. திறமையானவர்கள் ஒதுக்கப்படுவதும் சுமாராக விளையாடுபவர்கள்  செல்வாக்கு மிக்கவர்களால் தேர்ந்தெடுக்கப் படுவதும், அவர்கள் நீண்ட காலம் அணியில் இருப்பதும் அரசியலில், இந்திய அணியில் சாதரணமப்பா.

அறிவிக்கப் பட்ட பட்டியலில் இடம் பெற்றவர்கள்:

1. டோனி 

2. கோலி 

3. தவான் 

4. ரோஹித் 

5. ரஹானே 

6. சுரேஷ் இரைனா 

7. ஜடேஜா 

8. ராயடு 

9. அஸ்வின் 

10. அக்ஸார்  பட்டேல் 

11. இஷாந்த் ஷர்மா 

12. முஹம்மது ஷாமி 

13. உமேஷ் யாதவ் 

14. புவனேஷ் குமார் 

15. பின்னி 

யுவராஜ், ராபின் உத்தப்பா போன்ற சில முக்கிய வீர்ர்களால் இந்த பட்டியலில் இடம் பெற முடியவில்லை. போன உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற சிறந்த வீர்ர்களான சச்சின் டெண்டுல்கர் , சேவாக் ,காம்பீர் , சாஹீர்,  யூசுப் பத்தான், யுவராஜ் சிங் ஆகியோர் இல்லாத இந்த அணி போதிய பலம் உள்ளதாக இருக்கிறதா என்பது போகப் போகத் தான் தெரியும்.

முக்கியமாக சொல்ல வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், போன உலக கோப்பை இந்தியா  வெல்ல முக்கிய பங்கு அளித்த யுவராஜ் சிங் இந்த முறை அணியில் இடம் பெற முடியவில்லை. போன உலக கோப்பை நாயகனான யுவராஜால் இந்த அணியில் இடம் பெற முடியவில்லை என்பது சற்று கவலையாகத தான்  உள்ளது. யூவி ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் உலக கோப்பை அணியில் இடம் பெறுவார் என்று அவரது இரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். அவர்களுக்கு இந்த பட்டியல் ஏமாற்றத்தையே அளித்தது.

இந்த முறையும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆவலை வீ ரர்கள் பூர்த்தி செய்வார்களா? அல்லது சொதப்புவார்களா என்பதைப்  பொறுத்திருந்து பார்ப்போம். இந்திய கிரிக்கெட் அணிக்கு நம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

                            எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் 

          முக்கோண வெற்றி சூத்திரம் 


Post a Comment

 
Top