இந்திய ஜோதிட சாஸ்திரம் ஒன்பது கிரகங்கள் நம் வாழ்க்கையை எப்படி எல்லாம் பாதிக்கின்றன என்று தெளிவாக சொல்லியிருக்கிறது. கிரகங்கள் பற்றிய சில சுவையான செய்திகள் இதோ உங்களுக்காக.


a

சூரியன்: இது ஒரு ஆண்  கிரகம். சூரியன் தந்தை, தலைமை ஏற்கும் திறமை, அரசியல், அரசாங்கம், உடல் வலிமை முதலியவற்றிற்குக்  காரணமாகிறது. அதாவது, சூரியன் நீங்கள் பிறக்கும் பொழுது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருந்திருந்தால்  உங்கள் தந்தை நல்ல செல்வாக்கோடும், நீண்ட ஆயுளோடும் வாழ்வார் என்று பொருள் கொள்ள வேண்டும். சூரியனுக்குரிய எண் 1. அதிர்ஷ்டக் கல் ரூபி.

சந்திரன்: பெண் கிரகம். தாய், மன வலிமை, கடல் கடந்து செல்லுதல், திரவம் போன்றவற்றைக் குறிக்கிறது. சந்திரனின் எண் 2. அதிர்ஷ்டக் கல் முத்து.

செவ்வாய்: நெருப்புக்  கிரகம். சகோதர சகோதரிகள், நிலம், வீடு கட்டுதல், கோபம், வீரம், பலம், அறுவை சிகிச்சை போன்றவற்றைக் குறிக்கும். செவ்வாயின் எண் 9. அதிர்ஷ்டக் கல் பவழம்.

புதன்: வித்தை, தாய் மாமன், கணிதம், வியாபாரம், நகைச்சுவையாய் பேசுதல், எழுத்துத்  திறமை போன்றவற்றைக் குறிக்கும். புதனின் எண் 5. அதிர்ஷ்டக் கல் மரகதப்பச்சை.

குரு: ஆன்மிகம், குரு, பக்தி, நேர்மை, செல்வம், கல்வி, குழந்தைகள் போன்றவற்றைக் குறிக்கும். குருவின் எண் 3.  அதிர்ஷ்டக் கல் மஞ்சள் புஷ்பராகம்.

சுக்கிரன்: காதல், கல்யாணம், காமம், செல்வம், வாகனம், நகை, வாசனைத் திரவியங்கள் போன்றவற்றைக் குறிக்கும். அதாவது சுக்கிரன் உங்கள் பிறப்பு ஜாதகத்தில் நன்றாக இருந்தால், உங்கள் காதல் கைக்  கூடும். இல்லற சுகம் தித்திக்கும் எனலாம்.

சனி: உடல் ஊனம், விபத்து, நஷ்டம், தொழிலாளி, எண்ணை, இயந்திரம், நீதி, சோம்பேறித்தனம் போன்றவற்றைக் குறிக்கும். சனி ஒரு ஜாதகத்தில் கெட்டு விட்டால், அவரால் என்ன முயன்றாலும் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது எனபது விதி. சனியின் எண் 8. அதிர்ஷ்டக் கல் நீலக் கல்.

இராகு: திடீர் அதிர்ஷ்டம், கணினி, சூதாட்டம், அப்பாவின் அப்பா, வேற்று மதத்தினர் போன்றவற்றைக் குறிக்கும். இராகுவின் எண் 4. அதிர்ஷ்டக் கல் கோமேதகம்.

கேது: விபத்து, கண்டம், சிறை படுதல், தனிமை, வித்தியாசமாய் சிந்தித்தல், அவமானம், விஷக் கடி, அறுவை சிகிச்சை, அம்மாவின் அப்பா, ஞானம், போன்றவற்றைக் குறிக்கும். பெண் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் கேது இருந்தால் மாங்கல்ய தோஷத்தைக் குறிக்கும். கேதுவின் எண் 7. அதிர்ஷ்டக் கல் வைடூரியம்.

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்த வலைப் பதிவு அபத்தமாக தோன்றலாம். அதில் எந்த தவறும் இல்லை. சொல்லப் போனால் ஜோதிடத்தை நான் தற்செயலாக படிக்க நேர்ந்ததற்கு முன்பு எனக்கும் அப்படித் தான் தெரிந்தது.

வாழ்க வளமுடன்!

            வாஸ்து சாஸ்திரம் வேலை செய்கிறதா?

                        செவ்வாய் தோஷம் படுத்தும் பாடு 

Post a Comment

 
Top