அன்பு என்பது ஒரு அற்புதமான உணர்வு என்றால் காதல் என்பதை அழகான, அருமையான உன்னதமான உணர்வு என்று சொல்லலாம். காதல் வயப்படாத உயிரினம்தான் ஏது? காதலிப்பதை விட ஒரு சந்தோஷமான அனுபவம் வேறு இருக்க முடியாது. காதல் வலிமையானது. அதனால் தானோ என்னவோ காதலினால் பல சாம்ராஜ்ஜியங்கள் நிர்மூலமாகியிருக்கின்றன. காதலினால் ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். காதலை சரியாகக் கையாள்பவர்கள் ஆக்கப்பூர்வமாகச் செயல் படுகின்றனர். தவறாக பயன் படுத்துகின்றவர் அழிவுக்கு வித்திடுகின்றனர்.
அப்பேற்பட்ட காதல் எப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் வருகிறது? ஆணும் பெண்ணும் உடலமைப்பில் மட்டுமின்றி சிந்திப்பதிலும் வேறுபட்டு இருக்கின்றனர். ஆணை காட்சி உயிரினம் (visual creature) என்பார்கள். ஆண் பெண்ணைப் பார்க்கும் போது காதல் வசப்படுவான். பெண்ணை உணர்ச்சி உயிரினம் (emotional creature) என்பார்கள். பெண்ணும் ஆணைப் பார்க்கும் பொது காதல் வசப்படுவாள் தான். ஆனால் அன்பான வார்த்தைகளை ஆண் பேசும் பொது அவனுக்கு அடிமையாகவே ஆகிறாள்.
அதாவது ஆண் கண்ணாலும் பெண் காதாலும் காதல் வசப்படுவர் என்பது ஓரளவுக்கு உண்மையே. இது ஒரு பொதுவான கணிப்பே. ஆண்கள் அதிகமாக ஆபாசமான விஷயங்களை இணைய தளத்தில் பார்ப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கக்கூடும். பெண்ணுக்கு பேசப் பிடிக்கும். ஆணுக்குப் பார்க்க பிடிக்கும்.
பொதுவாக காதல் இருவருக்கும் கண்ணில் ஆரம்பித்து இதயத்தில் முடிகிறது. அது இதயத்தில் எப்பொழுதும் வீற்றிருக்க இருவரின் முயற்சிகளும் கட்டாயம் தேவை. ஆண் பெண்ணின் குணநலன்களையும், பெண் ஆணின் குணநலன்களையும் அறிந்து கொண்டால் அவர்கள் உறவில் என்றுமே விரிசல் ஏற்படாது. அவர்கள் வாழ்க்கை பேரின்பத்தில் திளைக்கும் என்பதில் ஐயமேயில்லை. வாழ்க வளமுடன்!
பெண்கள் ஆண்களிடம் சொல்லும் பொய்கள்
நீங்கள் விரும்பியதை அடைவது எப்படி?
அப்பேற்பட்ட காதல் எப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் வருகிறது? ஆணும் பெண்ணும் உடலமைப்பில் மட்டுமின்றி சிந்திப்பதிலும் வேறுபட்டு இருக்கின்றனர். ஆணை காட்சி உயிரினம் (visual creature) என்பார்கள். ஆண் பெண்ணைப் பார்க்கும் போது காதல் வசப்படுவான். பெண்ணை உணர்ச்சி உயிரினம் (emotional creature) என்பார்கள். பெண்ணும் ஆணைப் பார்க்கும் பொது காதல் வசப்படுவாள் தான். ஆனால் அன்பான வார்த்தைகளை ஆண் பேசும் பொது அவனுக்கு அடிமையாகவே ஆகிறாள்.
அதாவது ஆண் கண்ணாலும் பெண் காதாலும் காதல் வசப்படுவர் என்பது ஓரளவுக்கு உண்மையே. இது ஒரு பொதுவான கணிப்பே. ஆண்கள் அதிகமாக ஆபாசமான விஷயங்களை இணைய தளத்தில் பார்ப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கக்கூடும். பெண்ணுக்கு பேசப் பிடிக்கும். ஆணுக்குப் பார்க்க பிடிக்கும்.
பொதுவாக காதல் இருவருக்கும் கண்ணில் ஆரம்பித்து இதயத்தில் முடிகிறது. அது இதயத்தில் எப்பொழுதும் வீற்றிருக்க இருவரின் முயற்சிகளும் கட்டாயம் தேவை. ஆண் பெண்ணின் குணநலன்களையும், பெண் ஆணின் குணநலன்களையும் அறிந்து கொண்டால் அவர்கள் உறவில் என்றுமே விரிசல் ஏற்படாது. அவர்கள் வாழ்க்கை பேரின்பத்தில் திளைக்கும் என்பதில் ஐயமேயில்லை. வாழ்க வளமுடன்!
பெண்கள் ஆண்களிடம் சொல்லும் பொய்கள்
நீங்கள் விரும்பியதை அடைவது எப்படி?
Post a Comment