இன்று நாம் வாங்கும் காய்கறிகளிலும், பழங்களிலும் அதிக அளவு இரசாயன நச்சுக்கள் கலந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் விளைச்சலை அதிகப் படுத்த பசுமைப் புரட்சியை அறிமுகப் படுத்தினார்கள். அதனால் அதிக அளவு இரசாயன உரங்களையும், பூச்சி மருந்துகளையும் பயன் படுத்தத் தொடங்கினார்கள். அதில் வந்தது வினை. அதிக விளைச்சலுடன் கான்சர் என்னும் உயிர் கொல்லி நோயும் நாம் அதிக அளவில் அறுவடை செய்ய ஆரம்பித்து விட்டோம். இன்று மூன்றில் ஒரு இறப்பு  கான்சர்  நோயினால் வருகிறது என்பது ஆபத்தான போக்கு என்றால் அது மிகையாகாது அல்லவா?


ஆக, இன்று நாம் வாங்கும் காய்கறிகளிலும், பழங்களிலும் அதிக அளவு இரசாயன நச்சு கலந்து உள்ளது. உதாரணமாக இன்று நிறைய டாக்டர்கள் திராட்சை பழங்களை சாப்பிடாதீர்கள் என்று சொல்லுமளவுக்கு அதில் பூச்சி மருந்து கலந்து வருகிறது. எவ்வளவு சத்தான உணவு திராட்சை பழங்கள்? மருந்தாக செயல்படக் கூடிய அற்புத உணவு திராட்சை. அதுவே நஞ்சாக மாறி விட்டது கொடுமைதானே?

காலிபிளவர், கத்தரிக்காய், திராட்சை, வெண்டைக்காய், தக்காளி, தர்பீஸ்,  முட்டைகோஸ்  போன்றவற்றில் அதிக அளவு நச்சு கலந்து உள்ளது. ஆகவே நாம் வாங்கும் காய்கறிகளை நன்றாக, சரியான முறையில் கழுவுவது மிகவும் அவசியமாகிறது. பாகற்காய் போன்றவற்றில் பூச்சி மருந்து அடிக்கத் தேவை இல்லை. ஆகவே அவற்றை நாம் அப்படியே பயன் படுத்தலாம்.

அது சரி, காய்கறிகளையும், பழங்களையும் சரியாக கழுவுவது எப்படி?முதலில், குழாயை சற்று வேகமாக திறந்து விட்டு காய்கறிகளையும், பழங்களையும் கழுவ வேண்டும். பின், கல் உப்பு கரைசலில் ஒரு 5 நிமிடம் ஊற வைக்கவும். அதன் பின் மஞ்சள் கரைசலில் 5 நிமிடம் வைத்து, பின் எடுத்து நல்ல தண்ணீரில் கழுவி விட்டு பயன் படுத்துங்கள். உப்பு இரசாயன நச்சுக்களை எடுத்து விடும். மஞ்சள் கிரிமி நாசினியாகவும் செயல்  படும்.

நோய் இல்லா நல்ல ஆரோக்கியம் வேண்டுமென்றால் சற்று மெனக் கெடத் தான் வேண்டும்.கூடிய மட்டில் இயற்கை உணவுகளையே பயன் படுத்துங்கள்.

வாழ்க வளமுடன்!

நீங்கள் என் காலையில் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும்?

காலையில் முதல் உணவாக எதை எடுத்துக் கொள்ள வேண்டும்?

Post a Comment

 
Top