மானுட பிறவி உன்னதமான பிறவி என்பது நம் எல்லோருக்கும் தெரியும். மனித வாழ்க்கையை மூன்று முக்கிய விஷயங்கள் வழி நடத்தி செல்லுகின்றன. அவற்றை சரியாக புரிந்து கொண்டு வாழ்ந்தால் வெற்றி நிச்சயம். சந்தோஷமான வாழ்க்கையும் உறுதியாக அமையும். மேலே படியுங்கள்....


உங்கள் வாழ்க்கையை வழி நடத்தி செல்லும் மூன்று விஷயங்கள் 1. உங்கள் எண்ணங்கள். 2. உங்கள் வார்த்தைகள். 3. உங்கள் செயல்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படை உங்கள் எண்ணங்களே. முதலில் தோன்றுவது எண்ணங்கள். அவை பின் வார்த்தைகளாக வெளி வருகின்றன. பின் உங்கள் செயல்கள் பின் தொடர்கின்றன.

உங்கள் எண்ணங்கள் நல்லவையாக இருந்தால், உங்கள் வார்த்தைகளும், செயல்களும் நல்லவைகளாகத்தான் இருக்கும். உங்கள் செயல்கள் சரியாக இருக்கும் போது வெற்றிகளும், சந்தோஷங்களும் உங்களை நிச்சயமாக வந்து அடையும்.

உங்கள் எண்ணங்கள் எதிர்மறையாக இருந்தால் அல்லது கெட்டவைகளாக இருந்தால் தோல்விகளும், துன்பங்களும் தான் கிட்டும்.

நல்ல, நேர்மறையான எண்ணங்களை எண்ணுங்கள். நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். நல்ல செயல்கள் தானாக உங்களிலிருந்து வெளிப்படும். வாழ்க்கை சொர்க்கமாகும்.

உங்கள் வாழ்க்கையில்  வெற்றிகளும் சந்தோஷங்களும் நிறைந்திட வேண்டுமென்றால் உங்கள் எண்ணங்கள் சரியாக இருக்க வேண்டும். இது தான் எளிமையான வாழ்க்கை சூத்திரம் ஆகும்.

நல்ல எண்ணங்களைப் பெறுவது எப்படி? நல்ல விஷயங்களைப் படியுங்கள். நல்ல விஷயங்களைக்   கேளுங்கள். நல்லவர்களோடு சேருங்கள். அப்போது நல்ல எண்ணங்களே உங்கள் மனதில் தோன்றும். நல்ல பழக்க வழக்கங்கள் உங்களுக்கு ஏற்படும்.நல்ல செயல்களையே செய்வீர்கள். நல்ல பலன்களைக் கண்டிப்பாகப்  பெறுவீர்கள்.

நீங்கள் எதை அதிகமாக எண்ணுகிறீர்களோ அதாகவே ஆகிப் போவீர்கள் என்பது சத்தியம்.

வாழ்க வளமுடன்!

                           எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

                      உண்மையான சந்தோஷம் அடைவது எப்படி?

Post a Comment

 
Top