பொதுவாக பணக்கரர்களைத் தான் நாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாகக்  கருதுகிறோம். ஒரு துறையில் மிகவும் சிறந்து விளங்குபவர்களையும் நாம் வெற்றி பெற்றவராய் நினைக்கிறோம்.





அப்படிவாழ்க்கையில்  வெற்றி 
பெற்றவர்களெல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்களா? பணத்தையும், புகழையும் அதிக அளவில் சம்பாதித்தவர்களெல்லாம் மகிழ்ச்சியாய் இருக்கிறர்களா?

நிச்சயம் இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. அப்படிப்  பார்த்தால் மைக்கேல் ஜாக்சன், மர்லின் மன்ரோ போன்றோர் அத்தனை பணமும், புகழும் இருந்தும் ஏன் பரிதாபகரமான வாழ்க்கை வாழ வேண்டும்?

ஆக பணத்திற்கும் அல்லது புகழிற்கும் மகிழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.

மகிழ்ச்சி என்பது வெளியிலிருந்து வருவது கிடையாது. அது நம்முள்ளிருந்து வருவது. மகிழ்ச்சி என்பது மனதின் ஒரு நிலை. நம் மனதை நாம் நினைத்தால் எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்க முடியும். சுருங்கச்  சொன்னால் நரகத்தைச் சொர்க்கமாக மாற்றுவதும், சொர்க்கத்தை நரகமாக மாற்றுவதும் நம் கையில் தான் உள்ளது.

அனு  தினமும் தியானம் செய்து வந்தால் நம் மனது வலிமைப்படும். எத்தகைய  சூழ்நிலையிலும் நம்மால் சந்தோஷமாக வாழ முடியும். வாழ்க வளமுடன்!

                      விதி வலியதா? 

      ஒய் திஸ் கொலைவெறி,  கொலைவெறி, கொலைவெறி டோய் 


Post a Comment

 
Top